விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்க வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க அரசு முடிவு

தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வரும் நிலையில் மாணவர்களிடம் விளையாட்டுத்துறை மீதான ஆர்வம் அதிகரிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமல்லாமல் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கு விருதுகளும் வழங்கி பெருமை படுத்தி வருகிறது அரசு.

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்க வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. வெளிநாட்டு பயிற்சியாளர்கள் டென்னிஸ், தடகளம், நீச்சல் மற்றும் ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு நியமனம் செய்யப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு 11 மாதங்கள் வரை பயிற்சி வழங்குவார்கள்.


Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்