பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்க; 5,000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிடுக; வைகோ Published: 29 Jul, 20 12:49 pm Modified: 29 Jul, 20 12:49 pm பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், 5,000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, வைகோ இன்று (ஜூலை 29) வெளியிட்ட அறிக்கை: "தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களைக் கற்பிப்பதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசு ஆணை எண் 177-ன்படி, 11.11.2011 அன்று வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்டனர். பகுதிநேர ஆசிரியர்களான இவர்கள் வாரத்திற்கு மூன்றரை நாட்கள் பணியாற்றுவார்கள் என்றும், தொகுப்பூதியம் மாதம் ரூ.5,000 வழங்கப்படும் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் அர...